இன்சுலின் ஊசி மூலம் இனி வேண்டாம்...
June 6, 2009இன்றுவரை நீரிழிவு நோய்க்கான இன்சுலின், ஊசிமூலம்தான் உடலில் செலுத்தப்பட்டு வந்தது. தற்பொழுது இன்சுலினை வாய் வழியாக உட்கொள்ளும் முறையை பெங்களூரைச் சேர்ந்த பயோகான் என்ற மருந்து ஆராய்ச்சி நிறுவனம் சோதித்து வருகிறது. இதில் பல சாதகமான விஷயங்களும் இருக்கின்றன. வாய் வழியாக இன்சுலினை உட்கொள்ளும்போது, நமது உடலில் இயற்கையாக இருக்கும் இன்சுலின், குளுகோஸை கட்டுப்படுத்த எப்படி செயல்படுகிறதோ அதே பயனை, வாய் வழியாக உட்கொள்ளும்போது அடையலாம்.
அவ்வாறு செல்லும் இன்சுலின், வயிறு மற்றும் குடல்களைத் தாண்டி கல்லீரலை அடைந்து பின்பு ரத்த நாளங்கள் வழியாக மண்ணீரல் தசைகளை அடைகிறது. இங்குதான் இயற்கையாக இன்சுலின் உருவாகிறது. கல்லீரலில் குளுகோஸ், குளு கோஜனாக சேமித்து வைக்கப்பட்டு, தேவையான நேரத்தில் குளு கோஸாக வெளியிடப்படுகிறது. ஊசி வழியாக செலுத்தப்படும் இன்சுலின் கடைசியில்தான் கல்லீரலை அடைகிறது. குளுகோஸ் உற்பத்தி கல்லீரலில் இருக்கும் இன்சுலின் அளவைப் பொறுத்து தான் அமையும்.
சாப்பிடாமல் இருக்கும்போது, கல்லீரல் குளுகோஸை அதிகமாக உற்பத்தி செய்கிறது. சாப்பிட்ட பிறகு இன்சுலின் தூண்டுதலின் பேரில் கல்லீரல் குளுகோஸ் உற்பத்தியை நிறுத்துகிறது. இன்சுலின் ஊசிமூலம் செலுத்தப்படுவதை விட, வாய் வழியாக உட்கொள்வதே ரத்தத்தில் குளுகோஸ் அளவை குறைக்கும் சரியான வழிமுறை யாகும்.
நன்றி: வாஞ்ஜுர்
Posted by noormohideen.