If you are a Muslim and don't pray ! Prophet (peace and blessings of Allah be upon him) said: "Between a man and shirk and kufr stands his giving up prayer.” Narrated by Muslim, . And he (peace and blessings of Allaah be upon him) said: “The covenant that separates us from them is prayer; whoever gives up prayer is a kaafir.” Narrated by al-Tirmidhi, 2621 Now, think yourself who you are... _________________________________________________________________________
_________________________________________________________ அல்லாஹ்வின் அற்புத படைப்பே! உன்னை அல்லாஹ் படைக்கப்பட்ட நோக்கத்தையே மறுத்து வாழ்கிறாயே! இது எந்த வகையில் நியாயம். உன் காதை பாங்கு சப்தம் எட்டும் போதெல்லாம் நீ அசட்டையாக இருந்த போது உன் மனசாட்சியாகிய நான் அது குற்றம் என்பதை உணர்துகிறேன். நீ செய்யும் பாவச்செயல்கள் ஒவ்வொறிற்கும் நான் அந்த நிமிடம் ஒரு குற்ற உணர்வை எழுப்பாமல் இல்லை, ஆனால் நீதான் அதை பொருட்படுத்தாது மனோ இச்சைக்கு அடிமையாகி பொடுபோக்காக உன் இஷ்டம்போல் வாழ்கிறாய். நீ இவ்வுலகில் நிரந்தரமாக வாழ்ந்துவிடுவோம் என்று நினைக்கிறாயா? இதுவரை நீ வாழ்ந்த வருடங்களை நினைத்துப்பார், எவ்வளவு வேகமாக காலம் ஓடிவிட்டது என்பதை விளங்குகிறாய் அல்லவா?, இன்னும் எத்தனை வருடம் வாழப்போகிறாய் என்று உன்னையே நீ கேட்டுபார், இதோ ஓடிவிடும் நாட்கள், மரணத்தை நீ சுவைக்கும் நாள் இன்று இல்லாவிட்டாலும் நாளை கண்டிப்பாக வந்தே தீரும். உயிரை மலக்குமார்கள் எடுக்க இறைவனின் கட்டளை பிறப்பிக்கப்பட்ட அடுத்த நொடி முதல், உனக்கான மன்னிப்பின் வாசல்கள் அடைக்கப்படும்போது, உன்னின் எந்த கதறல்களும் பயனளிக்காது, அந்த சமயம் வரை உன்னை திருத்திக்கொள்ள நீ பெற்றிருந்த பல கோடி நிமிட சந்தர்ப்பங்களை வீணாக்கிவிட்டோமே என்று கைசேதப்படுவாய், திரும்பி வர வாய்ப்பு இருக்காது. உன்னைபடைத்த அல்லாஹ்வுக்கு நன்றி கெட்டவனாக நீ வாழ்ந்தாலும், உனக்காக அல்லாஹ்வின் படைப்புகள் உன் ஜனாசா தொழுகையை தொழுக தவரமாட்டார்கள். இவ்வுலகில் உன்மீது அன்பை பொழிந்த அனைவருக்கும், உயிரோடு இருந்தபோது அவர்களுக்கு பலமாக இருந்த நீ, உயிரை விட்டபின் அவர்களுக்கு ஒரு பாரமாகதான் இருப்பாய். இந்த ஜனாசாவை எப்போது கப்ரில் கொண்டு விட்டுவிடலாம் என்பதை தான் வந்த அனைவரின் பேச்சாக இருக்கும். உன் தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் உனக்காக சில நாட்கள் கண்ணீர் சிந்துவார்கள், நீ அல்லாஹ்வை மறந்தது போல, காலப்போக்கில் உன் பிரிவும் அவர்களுக்கு மறந்துப்போகும். பள்ளிக்கொள்ளையில் உன்னை தனிமையில் விட்டுவிட்டு சில நிமிடங்களுக்கு பின் அனைவரும் வந்துவிடுவார்கள். அதற்கு பின் கப்ரில் உன் நிலை என்னவாக இருக்கும் என்று என்றாவது யோசித்திருக்கிறாயா சகோதரா? ஒவ்வொரு நாளும் எந்த வேலையை முடிக்கலாம், எப்படி சொகுசாக வாழலாம், எப்படி வீடு கட்டலாம், வாழ்க்கையை எப்படி எஞ்சாய் பன்னலாம் என்று திட்டம்போடும் உன்னால் மரணத்தை எப்படி மறக்கமுடிகிறது. இவ்வுலகில் நீ அதிகபட்சம் வாழப்போவது என்னவோ 80-90 வருடங்கள், ஏன்? அடுத்த நிமிடம் கூட உனது என்பதற்கு எந்த உத்திரவாதம் இல்லை. மறுமை என்றோ அன்று வரை கப்ரில் தான் உன் வாழ்கை. நீ இறைவனுக்கு உகந்தவனாக வாழ்திருக்கும்போது மரணித்திருந்தால், உன் கப்ரு வாழ்கை சுகமானதாகவும், மாறு செய்திருந்தால் நரகமாகவும் இருக்குமே! நீ அல்லாஹ்விற்கு பொருத்தமானவனாக இல்லாமல் போனால், தனிமையில் கப்ரில் நீ சித்திரவதை செய்யப்படுவாய் அல்லவா? அதற்கு பிறகு உன்னை எழுப்பி கேள்வி கணக்குகள் கேட்கப்பட்டு அதன் படி சுவர்கமோ நரகமோ, அல்லாஹ்வே அறிவான். அடுத்த வீட்டு அண்ணன் இரந்துவிட்டார் என்று அன்று வருத்தப்பட்டாய், எதிர்வீட்டு அப்பா மவ்தாகிவிட்டார் என்று நேற்று வருத்தப்பட்டாய், சில நாட்களுக்கு முன் உன் நெருங்கிய சினேகிதன் உன்னை விட்டு பிரிந்துவிட்டார் என்று தாங்கமுடியாத துக்கம் கொண்டாய். இப்படியெல்லாம் வருத்தப்படும் உனக்கு உன் மரணம் பற்றி எப்படி மறந்து வாழ முடிகிறது. அல்லாஹ் நம்மனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக -Prepared by admin Koothanallur website made by noormohideen knr for tamil muslim koothanallur.com knrweb koothanallur news p.m.noormohideen நூர்முஹைதீன் இஸ்லாம் தமிழ் இஸ்லாம் கூத்தாநல்லூர்
_________________________________________________________________________ கப்ருகளை ஜியாரத் செய்யுங்கள்
நீங்கள் சந்திக்கும் கப்ரு உங்களுக்கு மரண
சிந்தனையை கொடுக்கும் என்றால்... அடங்கி இருப்பவருக்காக நீங்கள் இறைவனிடம் பிரார்த்தனை
செய்பவராக இருந்தால்....[மரணத்தை நினைவூட்டவே கப்ரு ஜியாரத்
அனுமதிக்கப்பட்டுள்ளது.] அவ்வாறு இல்லாமல் அங்கே அடங்கி இருப்பவரிடம்
கையேந்துபவர்களாக இருந்தால், நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பவராகிறீர்கள், அங்கு அடங்கியிருப்பவருக்கு உங்களின் கஷ்டத்தை தீர்க்கும் சக்தி இருக்கும் என்று நம்பினாலோ, அவர் வக்கீலாக உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மத்தியில் இருப்பார் என்று நம்பினாலோ, நீங்கள் மிகப்பெரிய வழிகேட்டில் இருக்கிறீர்கள், அல்லாஹ்வுக்கு மாறு செய்துக்கொண்டிருக்கிறீர்கள். தவ்பாச்செய்து மீண்டும் கலிமா சொல்லி மீளுங்கள்.(மேலும் படிக்க...)
_________________________________________________________________________ Useful articles
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா? அல்லாஹ்வைக் காண முடியுமா? _________________________________________________________________________ |
________________________________ Islamic Sites Koothanalluronline.com (Eg & Ta) _________________________________ ________________________________________Remember Muslims of Palestine, Syria, Kashmir, Burma.. in your Dua_________________________ About me:
Noor Mohideen (S/O P.P. Md Zakkaria) United Arab Emirates noor@mail.org முக்கிய இனைப்புகள் கண்மனி நாயகம் (ஸல்) (Eg) கண்மனி நபி(ஸல்) (Eg) Biography of Prophet (PBUH) PEACE T.V Islamic Research Foundationஇஸ்லாம் குரல் சத்திய மார்க்கம் ___________________________ To know about Islam Islam Tomorrow ___________________________ ___________________ Thanks for your visit(s).. |