+2 விற்க்கு பின் என்ன படிக்கலாம் - மாணவர்க்கான உயர்கல்வி வழிகாட்டி.
(By பேராசிரியர். ஆபிதீன்)
PDF ஐ தரவிரக்கம் செய்ய கீழே What to lear.pdf -ஐ க்லிக் செய்யவும்.
|
what to learn.pdf Size : 0.571 Kb Type : pdf |
How to detect HIDDEN CAMERA in trial rooms..........
Infront of the trial room take your mobile and make sure that mobile can make calls....... .
Then enter into the trial room, take your mobile and make a call.....
If u can't make a call......!! !!
There is a hidden camera......
This is due to the interference of fiber optic during the signal transfer.... ..
Please forward this to your friends to educate this issue to the public......
To prevent our innocent sisters and ladies from HIDDEN CAMERA...... ......
Thanks : Br.Mohamed Riyas
WiFi தொழில்நுட்பம் பற்றி தெரிந்துகொள்ளுவோம் ?
தற்காலத்தில் Wireless Network மிகவும் பிரபலமடைந்து வருகிறது, Laptops, PDA Phone போன்றவற்றிலும், அலுவலகங்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது. பழைய முறையான Wired Network-கை காட்டிலும் இது சுலபமான முறையாகும். Installation and Configuration போன்றவை மிகவும் சுலபமாக செய்யலாம்.
இந்த Wireless Network - WiFi அல்லது 802.11 Network என அழைக்கப்படுகிறது. கீழ்கண்ட படம் ஒரு WiFi Network - ஐ விளக்குகிறது,
Wireless Network-ஆனது, TV, Radio மற்றும் Cell Phones போல Radio Waves எனப்படும் ரேடியோ அலைகளை பயன்படுத்தி வேலை செய்கிறது. இதை தொழில்நுட்ப சொல்லில் Two Way Radio Communication என அழைக்கலாம். இதன் தகவல் எல்லை 100 Meters வரை இருக்கும்.
ஒரு கம்ப்யூட்டரில் உள்ள Wireless Network Adapter அருகில் உள்ள Wireless Access Point- உடன் எப்பொதும் தொடர்பில் இருக்கும், அது Computer Signal-களை Radio அலைகளாக மாற்றி (coding) தன்னிடமுள்ள Antenna மூலமாக Wireless Access Point அல்லது Router-க்கு அனுப்பி வைக்கிறது, பின்னர் Router ஆனது அதை திரும்பவும் Computer Signal-ஆக மாற்றி (Decoding) பின் internet-உடன் தொடர்பு கொள்கிறது. அதேபோல், Internet- இல் இருந்து தகவல்களை பெற்றபின் அதை Radio அலைகளாக மாற்றி (coding) தன்னிடமுள்ள Antenna மூலமாக கம்ப்யூட்டரின் Wireless Network Adapter-க்கு அனுப்பிவைக்கிறது. Wireless Network Adapter ஆனது அதை திரும்பவும் Computer Signal-ஆக மாற்றி (Decoding) திரையில் நமக்கு காண்பிக்கப்படுகிறது.
இந்த Radio Signal, மற்ற Radio Signal-களைவிட முற்றிலும் வேறுபட்டது, இதன் அலைவரிசை 2.4 GHz - 5 GHz ஆகும், இது மற்றவற்றைவிட கூடுதல் ஆகும், இந்த கூடுதல் அலைவரிசை அதிகபடியான தகவல்களை Transmit செய்ய உதவுகிறது. கீழ்கண்டவை 802.11 Network Standard-ன் வகைகள் ஆகும் ;
802.11a - இதன் அலைவரிசை 5 GHz வரை, வினாடிக்கு 54 Mbps வரை தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது. இது orthogonal frequency-division multiplexing
(OFDM) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Radio Signal-களை பல Sub-Signal-களாக பிரித்து கையாளுவதால் தகவல் இழப்பின்றியும் நல்ல வேகத்துடனும் இயங்குகிறது.
802.11b - இதன் அலைவரிசை 2.4 GHz வரை, வினாடிக்கு 11 Mbps வரை மட்டுமே தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது, இது complementary code keying
(CCK) modulation என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
802.11g - இதன் அலைவரிசை 2.4 GHz வரை, ஆனால் வினாடிக்கு 54 Mbps வரை தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது, இதுவும் orthogonal frequency-division
multiplexing (OFDM) என்ற தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.
802.11n - இதுவும் 802.11g Network போலேதான், ஆனால் இதன் வேகம் 802.11g - ஐ விட மூன்று மடங்கு அதிகம், தோராயமாக 140 Mbps. இது Multiple Input, Multiple Output
(MIMO) என்ற தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.
பொதுவாக நாம் பயன்படுத்தும் Wireless Network - க்கு ஒரு பெயர் உண்டு, அதை - SSID (service set identifier ) எனபர். பொதுவாக இது Wireless Router - இன் தயாரிப்பாளரின் பெயரிலேயே இருக்கும், வேண்டுமானால் இதை நாம் மாற்றி கொள்ளலாம். ஒவ்வரு Wireless Router-க்கும் ஒரு Channel இருக்கும், இந்த Channel - ன் அடிபடையிலேயே தகவல் பறிமாற்றம் நடைபெறும். ஒருவேளை நாம் இரண்டு Wireless Router-களை பயன்படுத்தினால் இரண்டிற்கும் வேறு வேறு Channel-களை பயன்படுத்தவேண்டும், இல்லையென்றால் தகவல் பறிமாற்றத்தில் சில குறைபடுகள் ஏற்படும்.
மற்றும், நம்முடைய Wireless Router - களை Secure Mode - லேயே Configure செய்து வைக்கவேண்டும், இல்லையென்றால் வெளியார்கள் நம்முடைய Network-ஐ தவறாக உபயோகிக்கக்கூடும்.
WiFi Protected Access - WPA, Wired Equivalency Privacy - WEP போன்றவை Wireless Security -ன் சில வகைகள் ஆகும்
வளைகுடா சபுராலிகளுக்கு ஒரு அறியத்தகவல்.
சவூதி அரேபியா வாழ் வெளிநாட்டினர்கள் அவர்களின் அரசாங்கம் சார்ந்த கீழ்க்கண்ட தகவல்களை அறிய சவூதி அரேபிய அரசின் உள்விவகாரதுறை அமைச்சகம் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்
உங்கள் குடும்பத்தினர்களின் விசா வரவு மற்றும் வெளியேற்றம் அறிய வேண்டுமா?
உங்களுக்கு இந்த வருடம் ஹஜ் செய்வதற்கு அனுமதியுள்ளதா / தகுதிபெற்றவரா?
உங்களின் சுகாதார அட்டை புதுப்பிக்கப் பட்டுள்ளதா?
உங்களுடைய ஆதரவில் வேலை செய்பவர்களின் குடியரசு அட்டை நிலை என்ன?
உங்களின் குடியரசு அட்டை (இக்காமா) நிலை என்ன?
உங்களின் விசா நிலை என்ன? (Exit / Re-Entry)
உங்களின் கைரேகை எடுக்கப்பட்டு அது அங்கீகரிக்கப் பட்டுவிட்டதா?
உங்களுக்கு போக்குவரத்து துறையின் அபராதம் உள்ளதா?
உங்கள் வாகனத்திற்கு எதுவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா?
இதுபோன்ற தகவல்களையும், மேலும் தகவல்களையும் பெற...
http://www.moi.gov.sa/wps/portal
என்ற மேலேயுள்ள சுட்டியை அழுத்தி, E-Services Tab என்ற பகுதியை அழுத்தி ”Passports" என்ற தலைப்பை அழுத்துங்கள்.
நாம் எதிர்பாராமல் திடீரென்று பயணம் செல்ல நேரலாம், மேலேயுள்ள எதாவது ஒன்றின் தடங்கலால் உங்கள் பயணம் செல்லமுடியால் ஆகலாம். எனவே இன்றே இவைகளை சரிபார்த்து வைத்துக்கொள்ளுங்கள்.
உங்களின் கடவுச்சீட்டு (Passport) கலாவதியாகியிருந்து நீங்கள் அவசரமாக பெறவேண்டியிருந்தால் “தட்கல்” என்ற அவசரமுறையில் இந்தியத் தூதரகத்தை அனுகினால் தருவார்கள் அவர்களின் இணையதள முகவரி
http://www.indianembassy.org.sa/
Tatkal service for issue of passport is also available)
”பிரச்னைகள் வருமுன் காப்போம்”.
உங்களுக்கு தெரிந்த சவூதிவாழ் அன்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
நன்றி:லால்பேட்டை எக்ஸ்பிரஸ்.
தஞ்சை மற்றும் நெல்லையில் புதிய பாஸ்போர்ட் சேவை அலுவலகங்கள்!
இந்நேரம்.காம்
தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தலா ஒரு புதிய பாஸ்போர்ட் சேவை அலுவலகத்தைத் தொடங்க உத்தேசிக்கப்பட்டு இருப்பதாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் சஷி தரூர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் 7 பாஸ்போர்ட் சேவை அலுவலகங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் சஷி தரூர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் மொத்தம் 68 பாஸ்போர்ட் சேவை அலுவலகங்கள் உள்ளன என்றும் பாஸ்போர்ட் அலுவலகங்களுடன் இணைந்த வகையில் நாட்டில் மொத்தம் 9 பாஸ்போர்ட் சேவை அலுவலகங்கள் உள்ளன என்றும் இந்த இரண்டையும் சேர்த்து இந்த அலுவலகங்களின் மொத்த எண்ணிகை 77 என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து அமைச்சர் சஷி தரூர் இத்தகவல்களைத் தெரிவித்தார்.
திருமணப் பதிவு கட்டாயம்-90 நாளி்ல் பதிவு செய்ய வேண்டும் தமிழகத்தில் திருமணப்பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குற்ற வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசு தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச்சட்டம் 2009ன்படி பல மதங்களைச் சார்ந்த இந்திய குடிமக்களின், 24.11.2009 முதல் தமிழகத்தில் நடைபெறும் அனைத்து திருமணங்களையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
இந்து திருமணங்கள் சட்டம் 1955, இந்திய கிறிஸ்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகம்மதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும் இச்சட்டத்தின் பிரிவு 3ன் கீழும் கட்டாயமாக பதிவு செய்யப்படவேண்டும்.
இச்சட்டத்தின்படி, பதிவுத் துறைத் தலைவர் அவர்கள் தலைமைத் திருமணப் பதிவாளராகவும், மாவட்டப் பதிவாளர்கள் அனைவரும் மாவட்ட திருமணப் பதிவாளர்களாகவும் மற்றும் சார் பதிவாளர்கள் அனைவரும் திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகு திருமணப் பதிவிற்கான குறிப்பாணை படிவம் 'ஒ' மற்றும் இதனுடன் இணைக்கப்படவேண்டிய விண்ணப்பபடிவம் ஆகியவை இலவசமாக அனைத்து பதிவு அலுவலகங்களிலும் வழங்கப்படும்.
கட்டாய திருமணப்பதிவிற்கான விவரங்கள் மற்றும் படிவங்கள் துறையின் இணையதளத்தில் (www.tnreginet.net) வெளியிடப்பட்டுள்ளன.
இதிலிருந்தும் படிவங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
திருமணப்பதிவிற்கான குறிப்பாணை படிவம் மற்றும் விண்ணப்பத்தினை எவ்வித விடல்களோ அல்லது பிழைகளோ இன்றி பூர்த்தி செய்து, மணமக்கள், திருமணம் நடத்தி வைத்தவர் மற்றும் இரு சாட்சிகளின் கையொப்பத்துடன், திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரம், இருப்பிட மற்றும் வயது தொடர்பான ஆதார ஆவணங்களுடன், திருமணம் நடைபெற்ற 90 நாட்களுக்குள் ரூ.100/ கட்டணத்துடன் (90 நாட்களுக்கு மேற்படின், ரூ.150/ ) திருமணம் நடைபெற்ற இடம் அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட திருமணப் பதிவாளரிடம் (சார் பதிவாளர்) அளிக்கப்பட அல்லது அஞ்சல் வழி அனுப்பப்பட வேண்டும்.
மேலும், திருமணத்திற்கான சாட்சிகளின் முகவரி மற்றும் ஆளறியும் அடையாள சான்று நகல்கள் இணைக்கவேண்டும்.
இந்த விண்ணப்பம் மற்றும் இணைக்கப்பட்ட ஆதாரங்கள் முறையாக இருப்பின், சம்பந்தப்பட்ட திருமணப்பதிவாளர் மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார்.
உரிய படிவத்தில் இல்லாத/ஆதார ஆவணங்கள் தாக்கல் செய்யாத/உரிய கட்டணம் செலுத்தப்படாத கோரிக்கை மனுக்கள் குறைகளை சரி செய்து மீண்டும் அளிக்குமாறு மனுதாரருக்கு திருப்பித் தரப்படும்.
தமிழ்நாடு திருமணப்பதிவு விதிகளின்படி மணமக்களின் அல்லது சாட்சிகளின் அடையாளங்கள் குறித்தும், அவர்கள் அளித்த தகவல்களின் சரித்தன்மை குறித்தும் சந்தேகம் ஏற்படின், மணமக்களுக்கு வாய்ப்பளித்து, விசாரணைக்குப்பின், திருமணப் பதிவாளர் திருப்தி அடையாவிட்டால், அத்தகைய திருமணப் பதிவுகள் அவரால் மறுக்கப்படும்.
இந்த மறுப்பு ஆணைமீது சம்பந்தப்பட்ட நபர்கள் ஆணை பெற்ற 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டப் பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
அவ்வாறு செய்யப்பட்ட மேல்முறையீடு மீது மாவட்டப் பதிவாளரால் பிறப்பிக்கப்படும் ஆணை திருப்தி இல்லையெனில் இதன் மீது ஆணை பெற்ற 30 நாட்களுக்குள் பதிவுத்துறைத் தலைவருக்கு மேல்முறையீடு செய்யலாம். பதிவுத்துறைத் தலைவரின் ஆணையே இறுதியானது.
தமிழ்நாடு திருமணங்கள் பதிவு விதிகள் 2009 அமலுக்கு வரும் நாளான 24.11.2009 முதல் நடைபெறும் அனைத்து திருமணங்களும், எந்த சாதி மற்றும் மதமாயிருப்பினும், மேற்குறிப்பிட்டவாறு உரிய நாளில் பதிவு செய்யாவிடில் அல்லது தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தால் அல்லது விதி மீறல் இருப்பதாகத் தெரிந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவழக்கு தொடரப்பட்டு, நிரூபிக்கப்படின், அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது
தமிழகத்தில் திருமணப்பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குற்ற வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது
குரலை மாற்றும் வசதி கொண்டசெல்பேசிகளால் ஆபத்து!!
Voice Changer Facility:

தொழில்நுட்ப வளர்ச்சி வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அது ஏற்படுத்தும் பாதிப்புகள் அச்சுறுத்துபவையாக இருக்கின்றன. தகவல் தொடர்புக்கான கண்டுபிடிப்புகளில் பெரிய சாதனையாகக் கருதப்படும் தொலைபேசியின் வழித்தோன்றலான செல்பேசி இன்று அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது. நம்மில் கணிசமானோரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்பேசிகள் உண்டு.
கையடக்க செல்பேசிகளை விதவிதமான வடிவங்களில், நவீன வசதிகளுடன் அறிமுகம் செய்வதில் தனியார் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதன் விளைவாக டார்ச் லைட்டில் தொடங்கி கேமரா, விடியோ என்று ஒவ்வொரு நாளும் புதுப்புது வசதிகள் செல்பேசிகளில் கூடிக் கொண்டே போகின்றன.
இந்நிலையில், சீன நாட்டுத் தயாரிப்பு செல்பேசிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “வாய்ஸ் சேஞ்சர்’ என்ற வசதி பலரின் தூக்கத்தைக் கெடுப்பதாக மாறியிருக்கிறது. சில முக்கிய நிறுவனங்களின் தயாரிப்புகளிலும் இந்த வசதி தற்போது வரத் தொடங்கிவிட்டது.
அதாவது, இந்த வசதியுள்ள செல்பேசிகளில், “வாய்ஸ் சேஞ்சர்’ பகுதியில் முதியவர், நடுத்தர வயது ஆண், இளைஞர், குழந்தை, இளம்பெண், நடுத்தர வயது பெண், மூதாட்டி என்று 7 வகையான குரல் பிரிவுகள் இருக்கும்.இதில், ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு நாம் பேச விரும்பும் நபரைத் தொடர்பு கொண்டால், எதிர் முனையில் இருப்பவருக்கு நம்முடைய குரல் நம் குரலாக ஒலிக்காது; மாறாக, நாம் தேர்ந்தெடுத்த முதியவர் குரலோ பெண் குரலோ ஒலிக்கும் மிகவும் தத்ரூபமாக.
பொ
ழுதுபோக்குக்காக நண்பர்களுடன் அரட்டையடிப்பதற்காக இந்தத் தொழில்நுட்ப வசதியை செல்பேசி நிறுவனங்கள் வழங்கினாலும், சிலர் தவறான வழியில் இந்த வசதியைப் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.
உதாரணமாக, நாம் இளம்பெண் குரலைத் தேர்ந்தெடுத்துப் பேசினால், எதிர்முனையில் இருப்பவர் தன்னிடம் பேசுவது இளம்பெண் என்றுதான் நினைத்துக் கொள்வார். இந்த வசதியை தவறாகப் பயன்படுத்துவதால், ஏற்படும் விளைவு எத்தனை மோசமானதாக இருக்கும் என்பதற்கு அண்மையில் மதுரையில் நிகழ்ந்த பொறியாளர் முத்துவிஜயன் கொலைச் சம்பவம் ஓர் உதாரணம்.
மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த முத்துவிஜயனிடம் (24) செல்பேசியில் பேசிய ஒருவர் தனது பெயர் பிரியா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கியுள்ளார். முத்துவிஜயனும் அவரை நம்ப, நாளடைவில் இருவரும் அடிக்கடி பேசத் தொடங்கியிருக்கின்றனர். அனைத்து விஷயங்களைப் பற்றியும் மனம்விட்டு பேசியுள்ளனர். பிரியா தனக்குப் பணம் தேவைப்படும்போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, முத்துவிஜயனிடம் இருந்து பணம் பெற்றிருக்கிறார்.
ஒரு நாள் முத்துவிஜயனுக்கு உண்மை தெரிய வந்தது; ப்ரியா என்ற பெயரில் “வாய்ஸ் சேஞ்சர்’ வசதியைப் பயன்படுத்தி தன்னிடம் பேசியது ஓர் ஆண் என்று.
இருவருக்கும் இடையே பிரச்னை வெடித்தது. முத்துவிஜயன் கொல்லப்பட்டார். பெரும் சிரமத்துக்குப் பிறகு எதிரிகளை போலீஸôர் கைது செய்தனர்.
முத்துவிஜயன் ஓர் உதாரணம்தான். வெளியே தெரியாமல் எத்தனையோ “வாய்ஸ் சேஞ்சர்’ மோசடிகள் பல இடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவமானத்துக்குப் பயந்து இந்த மோசடிகள் அவரவருக்குள்ளேயே புதைந்து கிடக்கின்றன.
பொதுவாக, தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை பலர் தனக்குள்கூட சொல்லிக்கொள்ள விரும்புவதில்லை. ஆதலால், இத்தகைய பிரச்னைகள் சமயத்தில் ஒருவரின் மனநலனையே பாதிக்கக்கூடும் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.
ஆனால், உளவியல் அடிப்படையிலும், குற்றச் செயல்கள் அடிப்படையிலும் மிக மோசமான பாதிப்புகளை உருவாக்கும் இத்தகைய தொழில்நுட்ப வசதியைக் கட்டுப்படுத்த நம்முடைய சட்டத்தில் இடமில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியது, “செல்பேசியில் குரலை மாற்றிப் பேசி மோசடியில் ஈடுபடும் நபர்கள் பற்றி புகார்கள் வந்தால் மட்டுமே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். மற்றபடி தொழில்நுட்ப வளர்ச்சியைக் கட்டுப்படுத்த எங்களுக்கு அதிகாரமில்லை’ என்கின்றனர்.
பிரச்னைக்குரிய இத்தகைய தொழில்நுட்ப வசதிகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம். அதேபோல, தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்தும் நிறுவனங்களுக்கும், இதுபோன்ற வசதிகளைக் கொண்ட செல்பேசிகள் வைத்திருப்பவர்களுக்கும் சுயகட்டுப்பாடு அவசியம்.
ஆபத்தை ஏற்படுத்தும் சீன பொம்மைகள்:
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொம்மைகளை சுங்க இலாகாவினர் தூத்துக்குடியில் பறிமுதல் செய்தனர்.
சில மாதங்களுக்கு முன் சீனாவில் இருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த சீன பொம்மைகளை சுங்க இலாகாவினர் சென்னையில் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்தியாவின் பிரபல கம்பெனிகளின் ஷாம்புகளை போலவே போலியாக தயாரிக்கப்பட்ட சீனா பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து துறைமுகங்களின் மூலம் இறக்குமதி செய்யப்படும் கன்டெய்னர்களை சுங்க இலாகாவினர் தீவிரமாக கண்காணி்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் சீனாவில் இருந்து இரு கன்டெய்னர்கடள் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றின் விபரங்கள் முழுமையாக குறிப்பிடப்படவில்லை. இதனால் கமிஷனர் ராஜன் தலைமையிலான அதிகாரிகள் அதனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த கன்டெய்னர்களில் இருந்து சீனா பொம்மைகள்,விளையாட்டு பொருட்கள் பார்ட்டிகளில் பயன்படுத்தப்படும் ஸ்பிரேக்கள் போன்றவைகளை பறிமுதல் செய்தனர்.
இதில் அந்த பொம்மைகள் தரம் குறைந்ததாகவும், உற்பத்தியாளர்கலின் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் குறிப்பிடபடவில்லை. இந்த பொம்மைகளில் காரீயம் என்ற ரசாயனம் கலந்த பெயின்டுகள் பளிச்சிடும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எனவே இத்தகைய பொம்மைகளை வைத்து குழந்தைகள் விளையாடுவதால் அவை குழந்தைகளுக்கு நுரையில் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அதனை இறக்குமதி செய்த நிறுவனம் சமர்பித்த தர சான்றிதழ்களும் பொருட்களுக்கும் தொடர்பில்லாமல் இருந்தது.
சீனா பொம்மைகளை இறக்குமதி செய்ய சுங்க துறை நிர்ணயித்திருக்கும் தரத்திற்கும் குறைவாக இருந்ததால் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்
நன்றி: திருவை.காம்
உங்கள் செல்பேசிச் சேவையை மாற்ற விரும்புகிறீர்களா?
2010 ஜனவரியில், செல்பேசி எண்ணை மாற்றாமல், செல்பேசிச் சேவை தருவோரை மாற்றிக்கொள்ளலாம் என்ற வசதி, இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதற்குக் கட்டணம், ரூ.19க்கு உள்ளாக இருக்கும் என்றும் தெரிகிறது.
இதனால் செல்பேசி நிறுவனங்கள், கலக்கத்தில் உள்ளன. நீங்கள் உங்கள் செல்பேசிச் சேவையாளரை மாற்ற விரும்புகிறீர்களா? ஏன்? வேறு எந்தச் சேவையாளரை நாடப் போகிறீர்கள்?
உயிர்களும் உறவுகளும் போனால் வருமா, கொஞ்சம் சிந்தியுங்கள்! நமது ஊரில் சமீப காலமாக சாலை விபத்தில் சிலர் மரணமடைவது வேதனைக்குறியது. எத்தனயோ ஆயிரம் கனவுகளை சுமந்துக்கொண்டிருந்தவர் ஒரு நிமிடத்தில் அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறார். காப்பவன் அல்லாஹ் தான், சிந்திக்கக்கூடிய சக்தியையும் அவன் தானே தந்தான்.
விபத்தை தவிர்க்க சில வழிகள்:
உங்கள் காரை/ பைக்கை ஒருவர் முந்தினால், அவரை விட வேகமாக ஓட்டாதீர்கள், அதனால் போவது உங்கள் உயிராக கூல இருக்கலாம்...
பேசிக்கொண்டோ, மொபைலை காதில் வைத்துக்கொண்டோ காரை/ பைக்கை ஓட்டாதீர்கள், உங்களைப்பற்றி அன்று ஊரே பேசும்படி ஆகிவிடலாம்.
வண்டி ஓட்டும் போது அடுத்தவர்களுக்கு கொஞ்சம் மதிப்பு கொடுங்கள்
குறிப்பிட்ட் வேகத்துக்கு மேல் அதி வேகமாக போகாதீர்கள், அதற்கு பிறகு நீங்கள் கார்/ பைக்கை தொட முடியாமல் கூட போகலாம்.
அடிக்கடி லைன் மாறாதீர்கள், பின்னால் வருவது உங்கள் சேதமாக கூட இருக்கலாம்.
அவசியம் இல்லாத பேச்சுக்களை டிரவரிடம் பேச வேண்டாம்.
காரில் அளவுக்கு அதிகமாக நபர்களை அழைத்துக்கொண்டு செல்லாதீர்கள்
குடும்பத்தோடு வெளியூர் போவதாக இருந்தால் உறவினர் / பக்கத்து வீட்டில், எங்கே செல்கிறீர்கள் என்ற விபரத்தை சொல்லிச்செல்லுங்கள்
நீங்கள் பயனம் செல்லும் காரை மெதுவாக போகச்சொல்லுங்கள், பணம் கொடுப்பது நீங்கள் தானே!
சங்கீதம் கேட்பதை தவிருங்கள். டிரைவர் கேட்க ஆசைப்பட்டால் உங்களை வீட்டில் இறக்கி விட்ட பிறகு கேட்கட்டும்.
இறவு நேர பயனத்தை தவிருங்கள், பகளில் நடக்காத வேலை எதுவும் இல்லை. வெயிலை ஒரு காரணமாக வைக்காதீர்கள். நாம் இருந்தால் தானே சொகுசாக வாழலாம்.
வெளியூர் கிளம்பும் முன்பு அங்கே அனைத்து வேலைகளும் முடித்து எத்தனை மணி நேரத்தில் திரும்ப முடியும் என்று யோசித்து அதற்க்கு தகுந்தாற்போல முன்னமே கிளம்புங்கள்
பாதுகாப்பாக இருக்க முயல்வது நம் கடமை, அல்லாஹ் நம்மை காப்பானாக ஆமீன்
ஏ.டி.எம் மோசடிகளும், தடுக்கும் வழிகளும்?
அவசர உலகத்தில் ஏ.டி.எம் என்பது ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. 24 மணி நேர சேவை, எந்த ஊரிலும் எந்த நேரத்திலும் பணம் எடுக்கும் வசதி, வெளிïருக்கு செல்லும்போது பணத்தை பாதுகாக்க வேண்டிய பயம் இல்லை என ஏராளமான பலன்கள் ஏ.டி.எம் மூலம் கிடைத்துள்ளது. தொழில் நுட்பம் அதிகரிக்க, அதிகரிக்க நமக்கான வசதிகள் அதிகரிப்பது போல, பிரச்சினைகளும் அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்சினை ஏ.டி.எம் வசதியையும் விட்டு வைக்கவில்லை.
உதாரணமாக சில சமயம் ஏ.டி.எம் மூலம் பணம் எடுக்கும் போது, நாம் ஆயிரம் ரூபாய் எடுக்க முயற்சித்தால், 800 ரூபாய் மட்டுமே வரும். ஆனால் நமது கணக்கில் இருந்து ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டு உள்ளதாக ஏ.டி.எம் கணக்கு காட்டும். இதைப்பற்றி நாம் வங்கியில் புகார் அளித்தாலும், ஏ.டி.எம் அளிக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என்பது வாடிக்கையாளர்களின் கருத்து. சில சமயம் நாம் ஆயிரம் ரூபாய் பணத்தை எடுக்க முயற்சித்தால், ஆயிரத்து 500 ரூபாய் பணம் வரும். ஆனால் நமது கணக்கில் ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்கப்பட்டிருப்பதாக ஏ.டி.எம் கணக்கு காட்டும். இப்படி ஏ.டி.எம் குளறுபடிகள் அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்ப கோளாறுகளால் மட்டுமின்றி, மோசடிகளின் காரணமாகவும் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஏ.டி.எம் உள்ளே ஏற்படும் மோசடிகள் மட்டுமின்றி ஏ.டி.எம் வெளியேவும் சில மோசடிகள் நடக்கின்றன. எனவே ஏ.டி.எம் மூலம் எப்படியெல்லாம் மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளது? அவற்றை எப்படி தடுக்கலாம்? என்பது பற்றிய தகவல்களை நிபுணர்கள் மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். அந்த தகவல்கள் இங்கு அளிக்கப்படுகின்றது.
குறைந்த தொகை: மோசடி ஆசாமிகள் மெல்லிய பிளாஸ்டிக் இழைகளை ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து பணம் வரும் துவாரத்தில் வைத்து விடுவார்கள். இதனால் வாடிக்கையாளர் பணம் எடுக்கும் போது முழுப்பணமும் வெளியே வராது அல்லது குறைந்த தொகை மட்டுமே வெளியே வரும். பணம் எடுக்கும் நபர் பணம் வரவில்லையே என நினைத்து தடுமாறிப் போவார். சிறிது நேரம் முயற்சி செய்து பார்த்து விட்டு, பணம் எடுக்க வந்தவர் ஏ.டி.எம் விட்டு சென்று விடுவார். அதுவரை காத்திருக்கும் மோசடி ஆசாமிகள், சம்பந்தப்பட்ட நபர் சென்ற பிறகு, தாங்கள் ஏற்கனவே வைத்திருந்த பிளாஸ்டிக் இழைகளை உருவி, வெளிவராத பணத்தை எடுத்து விடுவார்கள்.
கொக்கி மூலம் திருட்டு: சில மோசடி ஆசாமிகள், ஏ.டி.எம் இயந்திரத்தில் கார்டை நுழைக்கும் பகுதியில், மெல்லிய கொக்கியுடன் இணைந்த காந்த தகடுகளை வைத்து விடுவார்கள். இதனால் பணம் எடுப்பவர் டெபிட் கார்டையோ, கிரெடிட் கார்டையோ நுழைக்கும்போது அது உள்ளேயே சிக்கி விடும். உள்ளே இருக்கும் காந்த தகடுகள், கார்டில் உள்ள தகவல்களை பதிவுசெய்து விடும். உள்ளே சிக்கிய கார்டை எடுக்க முடியாமல், வாடிக்கையாளர் திணறும்போது மோசடி ஆசாமி வந்து உதவுவது போல நடிப்பார். வாடிக்கையாளரை மீண்டும் ஒருமுறை ரகசிய எண்ணை அழுத்தும்படி சொல்லுவார். அப்போது வாடிக்கையாளர் அழுத்தும் ரகசிய எண்ணை மோசடி ஆசாமி அறிந்து கொள்வார். அதன்பிறகும் கார்டு வெளியே வராததால் வாடிக்கையாளர் ஏ.டி.எம் விட்டு சென்று விடுவார். இதையடுத்து மோசடி ஆசாமி கொக்கியுடன் சேர்த்து உள்ளே சிக்கியிருக்கும் கார்டை வெளியே எடுத்து, மீண்டும் ஏ.டி.எம் இயந்திரத்தில் நுழைத்து, ரகசிய எண்ணை அழுத்தி பணத்தை எடுத்து விடுவார்.
போலி தகடு :இன்னொரு வகையான மோசடியில் கார்டு தகவலை படிக்கும் போலியான தகடை, ஏ.டி.எம் இயந்திரத்தின் துவாரத்தில் நுழைத்து விடுவார்கள். இதனால் நாம் கார்டை அதில் நுழைத்து பணம் எடுக்கும்போது, நமது கார்டு தகவல்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட நபரின் லேப்டாப் அல்லது கம்ப்ïட்டருக்கு சென்று விடும். அதைப் பயன் படுத்தி ஆன்லைன் மூலம் பணத்தை `அபேஸ்' செய்து விடுவார்கள்.
கேமரா :எ.டி.எம் இயந்திரத்தில் மறைவாக ஒரு சிறிய கேமராவை பொருத்தி விடுவார்கள். வாடிக்கையாளர்கள் ரகசிய எண்ணை அழுத்தும்போது, கேமரா அதனை பதிவு செய்து கொள்ளும். அதுமட்டுமின்றி நமது கார்டு எண்ணும் பதிவு செய்யப்படும். அதைக்கொண்டு போலியான கார்டு ஒன்றை தயாரித்து, பணத்தை எடுத்து விடுவார்கள்.
இதைப்போலவே மோசடி ஆசாமிகள், வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம் மூலம் பணம் எடுக்கும் போது அவர்களின் பின்புறம் நின்று கொண்டு, அவர்கள் பதிவு செய்யும் தகவல்களை பார்த்து விடுவார்கள். அதனைப் பயன்படுத்தி போலியான கார்டு தயாரித்து பணத்தை திருடுவார்கள்.
போலி ஏ.டி.எம் :வெளிநாடுகளில் மோசடிக்காக பயன்படுத்தப் படும் உத்தி இது. நமது நாட்டில் இதுபோன்ற மோசடிகள் இன்னும் நடக்கவில்லை. இதில் அச்சு அசலாக நமது வங்கியின் ஏ.டி.எம் போன்று ஒரு போலியான ஏ.டி.எம் இயந்திரத்தை உருவாக்குவார்கள். அது தெரியாமல் நாம் கார்டை நுழைத்து பணத்தை எடுக்க முயற்சித்தால், பணம் வராது. அதே சமயம் நமது கார்டு தகவல்களை போலி ஏ.டி.எம் மூலம் பதிவு செய்து கொண்டு, போலி கார்டை தயாரித்து விடுவார்கள்.
மேலே கூறப்பட்டுள்ளவை அனைத்தும், ஏ.டி.எம் எந்திரத்தை பயன்படுத்தி நடக்கும் மோசடிகள் ஆகும். ஏ.டி.எம் இயந்திரத்திற்கு வெளியேயும் மோசடிகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. இமெயில் மூலம் நமது இன்டர்நெட் பேங்கிங் பற்றிய தகவலை திருடுவது, ஸ்பாம்மிங், பிஷ்சிங் போன்ற செயல்பாடுகளின் மூலமும் நமது தகவலை திருடி ஆன்லைன் மூலம் பணம் திருடுவது போன்ற மோசடிகளும் நடக்கின்றன.
மோசடிகளை தடுப்பது எப்படி?
ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது, யாராவது அருகில் இருந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மற்ற நபர்களுக்கு தெரியாத வகையில் ரகசிய எண்ணை அழுத்த வேண்டும். ஏ.டி.எம் உள்ளே நுழையும் போதே கார்டை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஏ.டி.எம் இயந்திரத்தில் கார்டு சிக்கிவிட்டால் யாரிடமும் உதவி கேட்கக்கூடாது. உடனே ஏ.டி.எம் இயந்திரத்திற்கு அருகில் உள்ள போன் மூலம் வங்கிக்கு தகவல் அளித்து கார்டை முடக்க வேண்டும். கார்டை நுழைக்கும் துவாரத்தில் சிறிய நூல் ஏதாவது தொங்கினால் கார்டை உள்ளே நுழைக்க கூடாது.
இமெயில் மூலம் கார்டு பற்றிய தகவல்களை யாருக்கும் அனுப்பக் கூடாது. உங்கள் ஆன்லைன் கணக்குகளில் யாராவது நுழைய முயற்சிக்கிறார்கள் என்றால் உடனே வங்கிக்கு தகவல் அளிக்க வேண்டும்.
ஏ.டி.எம் மோசடிகளை தடுக்க வங்கிகள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளன. ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு கூடுதலான பாதுகாவலரை நியமிக்க இருக்கின்றன. கைவிரல் ரேகைகள் மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்கும்படியான புதிய வசதிகளை அறிமுகப்படுத்த இருக்கின்றார்கள். அதேசமயம் மோசடிக்காரர்கள் ரகசிய எண்ணை வாடிக்கையாளரிடம் திருடி பணம் எடுத்தால், வங்கிகள் அதை வாடிக்கையாளரின் தவறு என கூறி விடுவார்கள்.
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணம் திருடப்பட்டால், அதற்கான ஆதாரம் இல்லை என வங்கிகள் கையை விரித்து விடும் அபாயமும் உண்டு. ஏ.டி.எம் மோசடிகளை தண்டிக்கும் வகையில் நமது நாட்டில் போதுமான சட்டங்களும் இல்லை என நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே தவறு நடந்த பிறகு வங்கிக்கும், காவல் நிலையத்திற்கும் அலைவதை விட, தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வது வாடிக்கையாளர்களின் கையில்தான் உள்ளது. நன்றி: முத்துச்சரம்
ஹலால் சான்றிதழ் வழங்கும் நிறுவனம்
அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...
நாங்கள் Halal India Pvt Ltd எனும் இந்திய அரசு அங்கீகாரம்பெற்ற ஓர் நிறுவனத்தை இந்தியாவில் தொடங்கியுள்ளோம். அது இந்திய£வில் தயாரிக்கப்படும் அனைத்துவகையான உணவுப்பொருட்கள், இறைச்சி வகைகள், அழகுசாதனப் பொருட்கள், மருந்து வகைகள் போன்ற தயாரிப்புகளுக்கு சட்டப்பூர்வமான ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
உலகின் பல நாடுகளில் ஹலால் சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே முஸ்லிம்கள் உபயோகிக்கின்றனர், ஹலால்சின்னம் பொறிக்கப்படாத பொருட்களை முஸ்லிம்கள் முற்றிலுமாகப் புறக்கணித்துவிடுகின்றனர் என்பது நடைமுறையாகும். ஆனால் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியாவில் இதற்கான விழிப்புணர்வு முற்றிலும் இல்லை.எனவே, இந்திய முஸ்லிம்கள் தாம் உபயோகிப்பது ஹலால்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள இயலாத சூழ்நிலையில் இருப்பதைத் தவிர்க்கும் விதமாகவே Halal India Pvt Ltd எனும் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தலைசிறந்த முஸ்லிம் அறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பரிசோதனை மையங்களைக்கொண்ட நிறுவனமாகும். இந்திய£வின் பிரபல நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களைத் தொடர்புகொண்டு அதில் தகுதியானவற்றிற்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை வெற்றிகரமாகத்
தொடங்கியுள்ளோம். பல நாடுகளில் Halal India Pvt Ltd வழங்கும் ஹலால் சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யவேண்டும் என்ற உறுதிமொழியையும் பெற்றுள்ளோம்.
இந்தசேவையில் நீங்களும் பங்கேற்கும் விதமாக நீங்கள் ஓர் பயனீட்டாளர்(consumer) என்ற உரிமையில் கடைகள், shopping centre களில் பிஸ்கட்,சாக்லேட், மென்பானங்கள் -cool drinks- போன்ற உணவுப்பொருட்கள், இறைச்சி வகைகள், அழகுசாதனப் பொருட்கள், மருந்து வகைகள் ஆகியவற்றை வாங்கும்போது இதில் ஹலால் சின்னம் பொறிக்கப்படவில்லையே, நாங்கள் இதை எப்படி உபயோகிக்க முடியும் என்பது போன்ற விழிப்புணர்வுக் கேள்விகளைக் கேட்பதன் வழியே அவை விரைவில் ஹலால் சான்றிதழ் பெறுவதற்கு நீங்களும் துணைசெய்யலாம்.
எமது சேவைகள் குறித்த விபரங்களைத்தெரிந்து கொள்ளவும் தங்களது மேலான
ஆலோசனைகளை வழங்கவும் தொடர்புகொள்க
www.halalindia.co.in
http://en.wikipedia.org/wiki/Halal
sales@halalindia.co.in
நன்றி: முதுவை ஹிதாயத்
ஏ.டி.எம் : தெரிந்ததும் தெரியாததும் ! ATM (Automatic Teller Machine)
கட்டுக்கட்டாக பணத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு இப்போதெல்லாம் பஸ்சில் பதட்டப்பட்டுக்கொண்டே யாரும் பயணிப்பதில்லை. காரணம் ஏடி. எம் அட்டைகள்.
வங்கியில் கணக்கை ஆரம்பித்த அனைவருக்குமே ஒரு அட்டை கிடைக்க தற்போது எல்லா வங்கிகளும் வசதி செய்துள்ளன. எப்போது தேவையோ அப்போது எடுத்துக் கொள்ளலாம் எனும் நிலையும், எல்லா தெருக்களுக்குள்ளும் நுழைந்துவிட்ட தானியங்கி இயந்திரங்களும் பணத்தை தூக்கிச் சுமக்கும் பணியை குறைத்திருக்கின்றன.
நாம் பணம் தேவைப்படும் போது ஏ.டி. எம் முன்னால் சென்று நிற்கிறோம், நமது அட்டையை உள்ளே நுழைக்கிறோம். சங்கேத எண்ணை அமுக்குகிறோம். நம்முடைய கட்டளைக்கு ஏற்ப பணம் கிடைக்கிறது. திருப்திப்பட்டு விடுகிறோம்.
இதன் பின்னால் என்ன தான் இருக்கிறது ? ஏ.டி.எம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றிய தகவல்கள் எல்லாம் மிகவும் சுவாரஸ்யமானது.
Automatic Teller Machine என்பதன் சுருக்கம் தான் ATM. நம்முடைய அட்டையில் 16 எண்கள் கொண்ட ஒரு எண் இருக்கும். இது நம்மைப் பொறுத்தவரையில் ஒரு சாதாரண எண். ஆனால் இதன் ஒவ்வொரு எண்ணிற்கும் தனித்தனி அர்த்தங்கள் உண்டு.
முதல் ஆறு எண்கள் அட்டை எந்த வங்கியிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது என்பதைக் குறிக்கும். அதற்கடுத்த ஒன்பது எண்களும் சேவை வழங்கு நிறுவனங்களின் விருப்பத்தைப் பொறுத்த எல்லைக்குள் இருக்கும். கடைசி எண் ஒரு ரகசிய எண். அதுதான் உங்கள் அட்டை பயன்படுத்தக் கூடியதா இல்லையா என்பதைச் சொல்லும்.
மாஸ்டர்கார்ட் எண்கள் ஐந்து எனும் எண்ணில் ஆரம்பிக்கும், விசா எண்கள் நான்கு எனும் எண்ணில் ஆரம்பிக்கும் என்பது ஒரு சிறு சுவாரஸ்யத் தகவல்.
அட்டைகளை இரண்டு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று கிரடிட் கார்ட் எனப்படும் கடனட்டைகள். இன்னொன்று டெபிட் கார்ட் அல்லது செக் கார்ட். கடனட்டையில் நாம் செலவழிக்கும் பணத்தை மாதம் ஒருமுறை செலுத்தினால் போதும். செக் கார்ட் மூலம் செலவழிக்கும் பணம் நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து உடனே கழிக்கப்பட்டு விடும்.
ஏடிஎம் முன்னால் சென்று அட்டையை உள்ளே செலுத்தி நம்முடைய சங்கேத எண்ணைக் குறிப்பிட்டபின் நமக்கு எவ்வளவு பணம் தேவை என்பதைக் குறிப்பிட்டு பொத்தானை அமுக்குகிறோம். நம்முடைய அட்டையின் பின்னால் இருக்கும் மேக்னட்டிக் ஸ்ட்ரைப் நம்முடைய அட்டையின் எண்ணை மென் குறியீடாக்கி உள்ளே அனுப்பும். அதற்குப் பயன்படும் இடம் தான் கார்ட் ரீடர் எனப்படும் நாம் அட்டையை உள்ளே நுழைக்கும் இடம். அப்போது கட்டளை ஏடிஎம் முனையிலிருந்து சுவிட்ச் என அழைக்கப்படும் கணினி மென்பொருளுக்குள் நுழைகிறது. இங்கே இரண்டு விதமான சோதனை வளையங்கள் இருக்கின்றன. முதலில் நாம் பயன்படுத்தும் அட்டை சரியானது தானா ? அதற்கு நாம் கொடுத்த சங்கேத எண் சரியானது தானா என்பதைச் சரிபார்க்கும் சோதனை.
இந்தச் சோதனை தோல்வியடைந்தால் நாம் ஏதோ தவறு செய்திருக்கிறோம் என்று பொருள். ஒருவேளை சங்கேத எண்ணைத் தவறாகச் சொல்லியிருக்கலாம்.
இரண்டாவது சோதனை நம்முடைய வங்கிக்கணக்கில் நாம் கேட்கும் பணம் இருக்கிறதா ? நான் பணம் எடுப்பதில் இன்றைய தினத்தின் உச்ச வரம்பை எட்டியிருக்கிறோமா ? என்பது குறித்த சோதனைகள். முதல் சோதனை முடிந்தபின், இரண்டாவது சோதனைக்குள் நுழைந்து இரண்டும் சரியாய் இருந்தால் பணம் கொடுக்கலாம் எனும் பதில் தானியங்கி முனைக்கு வரும். இந்த இரண்டு சோதனைகளையும் கடக்க பல இலட்சம் தகவல்கள் அடங்கியிருக்கும் மென் கோப்புகளில் தேடுதல் நடக்கும்.
இந்த தேடுதல் முடிந்து தானியங்கி முனைக்கு வரும் தாமதம் சில வினாடிகளே. இந்த வினாடிகள் அதிகரிக்கும் போது தான் நாம் சலித்துக் கொள்கிறோம்.
பணத்தை எண்ணித் தரும் பணம் பட்டுவாடா இயந்திரமும் நுட்பமான சென்சார்களால் ஆனது. இது தவறு இழைப்பதில்லை. இரண்டு நோட்டுகள் ஒட்டி வரும் எனும் ஆசை நப்பாசையாய் போய்விடும் என்பது திண்ணம்.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் அடங்கியிருக்கிறது. நாம் நம்மிடம் ஒரு வங்கியின் அட்டை இருந்தாலும் வேறு வங்கியின் தானியங்கி நிலையமும் நமக்குக் பணம் கொடுக்கும். எப்படி ?
இதை செட்டில்மண்ட் என்பார்கள். அதாவது வங்கிகள் எந்தெந்த வங்கி அட்டைகளுக்குப் பணம் கொடுக்கிறதோ அந்தந்த வங்கிகளின் கணக்கில் அந்தப் பணத்தைச் சேர்த்துக் கொள்ளும். அன்றைய தினத்தின் இறுதியில் வங்கிகள் மற்ற வங்கிகளுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை கணக்கிட்டு உடன்பாடு செய்து கொள்கின்றன.
மின் பண பரிமாற்றம் எனப்படும் இந்த தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானதும், பணம் ஈட்டக் கூடியதுமாகும். பல முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் இதை நடத்துகின்றன.
சரி, மென்பொருள் நிறுவனங்களுக்கு இதனால் எப்படி காசு கிடைக்கிறது ? இந்த தானியங்கி நிலையத்திலிருந்து செல்லும் கட்டளைகள் மென்பொருளோடு இணையாவிடில் ஒன்றுக்கும் உதவாது. இதன் பின்னால் இருக்கும் மென்பொருள் தான் வரும் தகவல்களைச் சரிபார்த்தல், பணம் பட்டுவாடா செய்ய உத்தரவிடுதல், மீதம் கணக்கிடுதல் என ஒட்டுமொத்தப் பணியையும் செய்கிறது. அனைத்து விவரங்களையும் மென் கோப்புகளில் சேமித்தும் வைக்கிறது. இந்த சுவிட்ச் எனப்படும் இந்த மென்பொருளுக்குள் வரும் தகவல்கள், அல்லது விண்ணப்பங்களுக்கு ஏற்ப மென்பொருள் நிறுவனம் வங்கிகளிடம் பணம் பெற்றுக் கொள்கின்றன.
அதாவது நீங்கள் பத்து முறை பணம் எடுக்கிறீர்கள் என்றால் மென்பொருளுக்குக் கிடைப்பது பத்து தகவல்கள். ஒவ்வொரு தகவலுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை மென்பொருள் நிறுவனத்துக்குச் செல்லும். தினமும் பல ஆயிரக்கணக்கான தானியங்கிகளில் நிகழும் இந்த பரிவர்த்தனை மூலம் பல கோடிக்கணக்கான பணம் மென்பொருள் நிறுவனங்களுக்குப் போய் சேர்கிறது. இதற்காகத் தான் ஆயிரக்கணக்கான மென்பொறியாளர்கள் பணியாற்றுகின்றனர். அதிலும் ஒவ்வொரு வங்கிக்கும் உரிய பிரத்தேக சட்டங்களின் அடிப்படையில் மென்பொருள் இயங்குவது தான் முக்கியம். குறிப்பாக சில வங்கிகள் ஒரு நாள் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே
ஏடிஎம் வழியாக எடுக்க அனுமதிக்கும். சில வங்கிகள் ஐம்பதாயிரம் ரூபாய் வரை அனுமதிக்கும். இதற்குத் தக்க படி மென்பொருள் தயாராக்கப் பட வேண்டும்.
அமெரிக்காவில் இருபத்து ஐந்திற்கும் முப்பத்து நான்கிற்கும் இடைப்பட்ட வயதுடையவர்களில் அறுபது சதவீதம் பேர் மாதம் எட்டு முறை ஏடிம் இயந்திரத்தைப் பணம் எடுக்க நாடுகிறார்களாம். பெரும்பாலான ஏடிஎம் நிலையங்களில் வெள்ளிக்கிழமைகளில் தான் அதிக பரிவர்த்தனை நடக்கிறதாம்.
ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்துபவர்கள் மற்றவர்களை விட இருபது முதல் இருபத்து ஐந்து சதவீதம் வரை அதிகமாகச் செலவழிக்கிறார்களாம்.
ஏடிஎம் அட்டைக்கு மிக முக்கியமானது பின் எனப்படும் சங்கேத எண். இது தானியங்கியில் அளிக்கப்பட்டவுடன் குறியீடுகளாக மாறிவிடும். அதன் பின் யாரும் அதை திருட முடியாது.
ஆனால் அது நம்மிடம் இருக்கும் வரை அதை நாம் தான் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் இழப்பு நமக்கு தான். அட்டையும் எண்ணும் கிடைத்துவிட்டால் யார் வேண்டுமானால் நம் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியும். இணையத்திலும் பொருட்கள் வாங்க முடியும்.
சங்கேத எண்ணை பத்திரமாய் வைத்திருக்க சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால் போதும்.
சங்கேத எண்ணை எழுதி வைக்கக் கூடாது. மறந்து விடுவோம் எழுதியே ஆகவேண்டும் என விரும்பினால் அதை வீட்டில் எங்காவது பத்திரமாய் எழுதி வைக்க வேண்டும். பர்சிலோ, ஏடிஎம் அட்டை இருக்கும் இடங்களிலோ வைக்கவே கூடாது. சங்கேத எண் உங்களோடு தொடர்பற்றவையாக ஆனால் உங்களால் மறக்க முடியாததாக இருக்க வேண்டும். குறிப்பாக உங்கள் பிறந்த நாள், தொலைபேசி எண் போன்றவை இல்லாமல் இருத்தல் நலம்.
சங்கேத எண்ணை எழுதி வைக்கும்போது கூட அதை உங்களுக்கு மட்டுமே புரியும் சங்கேத மொழியிலேயே எழுதி வைக்கலாம்.
சங்கேத எண்ணை பயன்படுத்தும் போது தானியங்கிக்கு மிகவும் அருகாக குனிந்து மற்றவர்கள் பார்க்காத படி எண்களை பயன்படுத்த வேண்டும். குனிந்தபடி எண்ணை பயன்படுத்துவது ரகசியக் காமராக்களிடமிருந்து பெரும்பாலும் தப்ப வைக்கும்.
பணம் எடுத்ததும் உடனே பாக்கெட்டில் பாதுகாப்பாக வைத்துவிட்டு சென்று விடுங்கள். வீட்டில் சென்று எண்ணிப்பாருங்கள். எப்படியானாலும் தவறு நிகழ்ந்தால் அதை சம்பந்தப்பட்ட வங்கிக்குத் தான் தெரியப்படுத்த வேண்டும் எனவே தானியங்கி முன்னால் நின்று எண்ணிக்கொண்டிருப்பது தேவையற்றது.
யாராவது உங்களைத் தாக்கக் கூடும் எனும் பயம் தோன்றினால் ‘கேன்சல்’ பட்டனை அமுக்கி விட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்புங்கள்.
இரவு நேரங்களில் ஏடிஎம் பயன்படுத்த வேண்டியிருந்தால் ஆள்நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களிலுள்ள ஏடிஎம் களைப் பயன்படுத்துங்கள்.
முக்கியமாக அட்டையின் பின்னால் இருக்கும் தொலைபேசி எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அட்டை தொலைந்ததை அறிந்தால் உடனே அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவியுங்கள். உடனே உங்கள் அட்டையின் எண் ‘ஏமாற்று’ வரிசையில் சேர்க்கப்படும். அதன்பின் அந்த அட்டையை யாராவது பயன்படுத்தினாலும் அது ‘ஏமாற்று வேலை’ என்னும் முத்திரை இருப்பதால் நிராகரிக்கப்படும்.
ஏடிஎம் கட்டுப்பாடு OCT-15 முதல் அமல்!
மற்ற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு அக்டோபர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) தெரிவித்துள்ளது. மற்ற வங்கி ஏடிஎம் களை வாடிக்கையாளர்கள் அடிக்கடி பயன்படுத்து வதால் வங்கிகளின் செலவு அதிகமாவதாக வங்கிகள் புகார் செய்தன. இதை யடுத்து ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன்படி, மற்ற வங்கி ஏடிஎம்மில் ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும். தவிர, மாதத்தில் 5 தடவை பணம் எடுக்கலாம். இதற்கு மேல் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டுப்பாடு அக்டோபர் 15 முதல் நடைமுறைக்கு வரும் என இந்திய வங்கிகள் சங்கத் தலைவர் நாயர் தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் அரசு வேலைவாய்ப்பு பதிவு தகவல்களை பெற..
நீங்கள் வேலைவாய்ப்பு மையங்களில் அரசு வேலைக்கு பதிவு செய்துள்ளீர்களா? கீழ்கண்ட வெப்தளத்திற்கு சென்றால் உங்களுக்குத் தேவையான வேலைவாய்ப்புத் தகவல்கள், சீனியறிட்டி விபரங்கள், மாநில வாறியான வேலைவாய்ப்பு அலுவலக முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் பெறலாம்
மேலும் Job Seeker என்ற லிங்க்-ஐ கிளிக்செய்து தங்களுடைய பதிவு எண்ணும் பிறந்த தேதியும் டைப் செய்தால் உங்களுக்குத் தேவையான விபரம் இன்ஷா அல்லாஹ் கிடைக்கலாம்.
இணையதள முகவரி
www.employment.tn.gov.in
வேலை வாய்ப்பு தொடர்பான வின்னப்பான்கள்
Registration form for candidates
Quarterly return to be submitted to the local Employment Exchange - ER-I
Occupational return to be submitted to the local Employment Exchange once in two years - ER-II
Unemployment Assistance Application Form
Declaration for Unemployment Assistance
கிரையப் பத்திரத்தின் மூலம் சொத்து சொந்தமாகிவிடுவதில்லை” – (சொத்து ஆலோசகர்' திரு. பீட்டர்)
“நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப்பிரச்சினைகளுக்கு இது மூலகாரணமாகஅமைந்துவிடுகிறது”
“வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்!” என்று கூறுவார்கள். இரண்டும் சாதாரண விஷயமல்ல என்பதே அதன் தொனி. வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்கள் வாங்கும் போது, அதற்கு சட்ட ரீதியில், முறையான வழிமுறை என்ன என்பதைப் பலரும் அறிந்திருப்பதில்லை. அரைகுறையாகக் கேள்விப்படும் விபரங்களை வைத்தும், பழக்கமானவர்கள் சொல்கிறார்களே என்பதைக் கருத்தில் கொண்டும் சொத்துக்களை வாங்கி விடுகின்றனர். சொத்து சரியான முறையில் பதிவு செய்யப்படாதபோது உரிமையாளர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது; சிலசமயம் தமது சொத்துக்களைக் கூட இழக்கும்படி ஆகி விடுகிறது.
சென்னை தி.நகரில் இயங்கும் ட்ரைஸ்டார் ஹௌஸிங் பி லிட்(Tristar Housing Pvt Ltd)என்ற நிறுவனம் சொத்துக்கள் குறித்து ஆலோசனைகள் வழங்குவதோடு, அவற்றைப் பராமரிப்பதிலும் வாடிக்கையாளர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. பீட்டர் அவர்களை சந்தித்தோம்.
“நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம்.பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப்பிரச்சினைகளுக்கு இது மூலகாரணமாக அமைந்துவிடுகிறது” என்கிறார் பீட்டர்.
இது குறித்து பல நுணுக்கமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொ அவருடனான ஒரு ண்டார். பயனுள்ள நேர்காணல் இதோ:
சொத்து வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ அரசாங்கத்தின் எந்தெந்தத் துறைகளை நாம் அணுக வேண்டும்?
மாநில அரசின் பதிவுத் துறை (Registration Department)யும், வருவாய்த் துறை (Revenue Department)யும், சொத்துப் பரிமாற்றத்தில் சம்பந்தப்படும். சொத்து வாங்கியபின் இவ்விரு துறைகளிலும் உரிமையாளரின் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
பதிவுத் துறையில் நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? சொத்து சம்பந்தமாக அந்தத் துறை பராமரிக்கும் விவரங்களைப் பற்றிக் கூறுங்களேன்.
நாம் கிரையப் பத்திரம் (Sale Deed) செய்யும் சார்பதிவாளர் அலுவலகம் (Sub-Registration Office),பதிவுத் துறை (Registration Department)யின் கீழ் வருகிறது. இங்கு நாம் மற்றவரிடம் இருந்து இடம் வாங்கும்போது அதற்காக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் 8%முத்திரை தீர்வையாகவும் மற்றும் 1% பதிவுக் கட்டணமாகவும் செலுத்துகிறோம். ஆகவே, நாம் இடம் வாங்குவதற்கு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தவும் மற்றும் நிலம் விற்பவரும் வாங்குபவரும் சார்பதிவாளர் முன்னிலையில் கிரையப் பத்திரத்தில் கையொப்பம் இடவும் சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டி இருக்கிறது.
இந்தத் துறையின் பதிவேட்டில் ஒருவரிடம் இருந்து மற்றவர் இந்த இடத்தை வாங்கி இருக்கிறார்; அதற்கான பத்திர எண் இது என்ற விபரம் மட்டுமே இருக்கும். நிலத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பது பற்றி இந்தத் துறை அக்கறை கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம். இதை முக்கியமாக மனதில் கொள்ள வேண்டும்.
அப்படியானால் உரிமையாளர் பெயரை எங்கே மாற்றம் செய்ய வேண்டும்?
வருவாய்த் துறை (Revenue Department)யில்தான் நிலத்திற்கான விவரங்கள் அனைத்தும் இருக்கும். பட்டா (Patta), சிட்டா (Chitta), அடங்கல் (Adangal), 'அ' பதிவேடு (‘A' Register),நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) என ஐந்து வகையான பதிவேடுகளை இந்தத் துறை பராமரிக்கிறது.
நிலத்தின் உரிமை நமக்குத்தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம்தான் பட்டா என்பது. ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு செய்வதே பட்டாவை வைத்துத்தான். அதில் மாவட்டத்தின் பெயர் மற்றும் ஊரின் பெயர், பட்டா எண்,உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களுடன், புல எண்ணும், உட்பிரிவும், (Survey Number and Subdivision) , நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும்.
ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா என்பது. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு,தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதான் ‘அடங்கல்'என்பது. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது,பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்ன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.
'அ' பதிவேட்டில் (‘A' Register) கீழ்க்கண்ட விபரங்கள் இருக்கும்:
1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,
4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.
நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) இடம் எவ்வாறு பல பகுதிகளாகப்பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. நிலங்கள் ஏதாவது ஒரு கிராமத்தின் கீழ் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு எண்கொடுக்கப்படும். அதுவே சர்வே எண் என்பது. நம் கிரையப் பத்திரத்தில் சொத்து விவரம் (Schedule) பகுதியில் நம்முடைய இடம் எந்த சர்வே எண்ணில் வருகிறது எனகுறிக்கப்பட்டிருக்கும்.
இவை அனைத்திலுமே உரிமையாளர் பெயர் மாற்றப்பட வேண்டும் என்பது மனதில் கொள்வது மிகவும் அவசியம்.
இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா! சரி.. வருவாய்த் துறையில் நம்முடைய ஆவணங்களைப் பெயர் மாற்றம் செய்யத் தவறிவிட்டால்என்னவாகும் என்பதைப் பற்றியும் கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்களேன்.
பட்டா பெயர் மாற்றம் செய்யாவிட்டால் வருவாய்த் துறையின் ஆவணங்களின் படி நீங்கள் உரிமையாளர் அல்ல. பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவர்தான் உரிமையாளர். ஒரு வேளை அரசாங்கம் நம்முடைய நிலத்தை கையகப்படுத்தினால்,அதற்கான இழப்பீட்டுத் தொகை பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவர்களுக்குவழங்கப்படும்.
நீங்கள் பட்டா பெயர் மாற்றம் செய்யவில்லை என்பதை உங்களுக்கு இடத்தை விற்றவர் தொரிந்து கொண்டால் அவர் பெயரில்
வரி செலுத்தி விடுவார். மேலும் அடங்கல் அவர் பெயருக்கு ஒவ்வொரு வருடமும் வாங்கி வைத்துக் கொள்வார். அடங்கல் அவர் பெயரில் இருந்தாலே அவர்தான் அதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது உறுதியாகி விடும். நாம் வேறொருவருக்கு விற்பனை செய்யும்போது இது பிரச்சினையைக் கொடுக்கும். எனவே,நம் இடத்தை கிரையப் பத்திர மூலம் பதிவு செய்து வாங்கி விட்டோம், எல்லாம் முடிந்துவிட்டது என இருக்கக் கூடாது. உடனே பட்டா பெயர் மாற்றம் செய்துவருவாய்த் துறையின் அனைத்து பதிவேடுகளையும் நமது பெயருக்கு மாற்றம் செய்யவேண்டும்.
ali azarudhin
“வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்!” என்று கூறுவார்கள். இரண்டும் சாதாரண விஷயமல்ல என்பதே அதன் தொனி. வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்கள் வாங்கும் போது, அதற்கு சட்ட ரீதியில், முறையான வழிமுறை என்ன என்பதைப் பலரும் அறிந்திருப்பதில்லை. அரைகுறையாகக் கேள்விப்படும் விபரங்களை வைத்தும், பழக்கமானவர்கள் சொல்கிறார்களே என்பதைக் கருத்தில் கொண்டும் சொத்துக்களை வாங்கி விடுகின்றனர். சொத்து சரியான முறையில் பதிவு செய்யப்படாதபோது உரிமையாளர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது; சில சமயம் தமது சொத்துக்களைக் கூட இழக்கும்படி ஆகி விடுகிறது.
சென்னை தி.நகரில் இயங்கும் ட்ரைஸ்டார் ஹௌஸிங் பி லிட்(Tristar Housing Pvt Ltd) என்ற நிறுவனம் சொத்துக்கள் குறித்து ஆலோசனைகள் வழங்குவதோடு, அவற்றைப் பராமரிப்பதிலும் வாடிக்கையாளர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. பீட்டர் அவர்களை சந்தித்தோம்.
George Peter“நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப்பிரச்சினைகளுக்கு இது மூலகாரணமாக அமைந்துவிடுகிறது” என்கிறார் பீட்டர்.
இது குறித்து பல நுணுக்கமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவருடனான ஒரு பயனுள்ள நேர்காணல் இதோ:
சொத்து வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ அரசாங்கத்தின் எந்தெந்தத் துறைகளை நாம் அணுக வேண்டும்?
மாநில அரசின் பதிவுத் துறை (Registration Department)யும், வருவாய்த் துறை (Revenue Department)யும், சொத்துப் பரிமாற்றத்தில் சம்பந்தப்படும். சொத்து வாங்கியபின் இவ்விரு துறைகளிலும் உரிமையாளரின் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
பதிவுத் துறையில் நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? சொத்து சம்பந்தமாக அந்தத் துறை பராமரிக்கும் விவரங்களைப் பற்றிக் கூறுங்களேன்.
நாம் கிரையப் பத்திரம் (Sale Deed) செய்யும் சார்பதிவாளர் அலுவலகம் (Sub-Registration Office), பதிவுத் துறை (Registration Department)யின் கீழ் வருகிறது. இங்கு நாம் மற்றவரிடம் இருந்து இடம் வாங்கும்போது அதற்காக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் 8% முத்திரை தீர்வையாகவும் மற்றும் 1% பதிவுக் கட்டணமாகவும் செலுத்துகிறோம்.
ஆகவே, நாம் இடம் வாங்குவதற்கு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தவும் மற்றும் நிலம் விற்பவரும் வாங்குபவரும் சார்பதிவாளர் முன்னிலையில் கிரையப் பத்திரத்தில் கையொப்பம் இடவும் சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டி இருக்கிறது.
இந்தத் துறையின் பதிவேட்டில் ஒருவரிடம் இருந்து மற்றவர் இந்த இடத்தை வாங்கி இருக்கிறார்; அதற்கான பத்திர எண் இது என்ற விபரம் மட்டுமே இருக்கும். நிலத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பது பற்றி இந்தத் துறை அக்கறை கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம். இதை முக்கியமாக மனதில் கொள்ள வேண்டும்.
அப்படியானால் உரிமையாளர் பெயரை எங்கே மாற்றம் செய்ய வேண்டும்?
வருவாய்த் துறை (Revenue Department)யில்தான் நிலத்திற்கான விவரங்கள் அனைத்தும் இருக்கும். பட்டா (Patta), சிட்டா (Chitta), அடங்கல் (Adangal), ‘அ’ பதிவேடு (‘A’ Register), நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) என ஐந்து வகையான பதிவேடுகளை இந்தத் துறை பராமரிக்கிறது.
நிலத்தின் உரிமை நமக்குத்தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம்தான் பட்டா என்பது. ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு செய்வதே பட்டாவை வைத்துத்தான். அதில் மாவட்டத்தின் பெயர் மற்றும் ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களுடன், புல எண்ணும், உட்பிரிவும், (Survey Number and Subdivision), நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்னும் விவரமும், நிலத்தின்
ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா என்பது. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதான் ‘அடங்கல்’ என்பது. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்ன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.
‘அ’ பதிவேட்டில் (‘A’ Register) கீழ்க்கண்ட விபரங்கள் இருக்கும்:
1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,
4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.
நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) இடம் எவ்வாறு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. நிலங்கள் ஏதாவது ஒரு கிராமத்தின் கீழ் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு எண் கொடுக்கப்படும். அதுவே சர்வே எண் என்பது. நம் கிரையப் பத்திரத்தில் சொத்து விவரம் (Schedule) பகுதியில் நம்முடைய இடம் எந்த சர்வே எண்ணில் வருகிறது என குறிக்கப்பட்டிருக்கும்.
இவை அனைத்திலுமே உரிமையாளர் பெயர் மாற்றப்பட வேண்டும் என்பது மனதில் கொள்வது மிகவும் அவசியம்.
இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா! சரி.. வருவாய்த் துறையில் நம்முடைய ஆவணங்களைப் பெயர் மாற்றம் செய்யத் தவறிவிட்டால் என்னவாகும் என்பதைப் பற்றியும் கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்களேன்.
பட்டா பெயர் மாற்றம் செய்யாவிட்டால் வருவாய்த் துறையின் ஆவணங்களின் படி நீங்கள் உரிமையாளர் அல்ல. பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவர்தான் உரிமையாளர். ஒரு வேளை அரசாங்கம் நம்முடைய நிலத்தை கையகப்படுத்தினால், அதற்கான இழப்பீட்டுத் தொகை பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவர்களுக்கு வழங்கப்படும்.
நீங்கள் பட்டா பெயர் மாற்றம் செய்யவில்லை என்பதை உங்களுக்கு இடத்தை விற்றவர் தொரிந்து கொண்டால் அவர் பெயரில் வரி செலுத்தி விடுவார். மேலும் அடங்கல் அவர் பெயருக்கு ஒவ்வொரு வருடமும் வாங்கி வைத்துக் கொள்வார். அடங்கல் அவர் பெயரில் இருந்தாலே அவர்தான் அதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது உறுதியாகி விடும். நாம் வேறொருவருக்கு விற்பனை செய்யும்போது இது பிரச்சினையைக் கொடுக்கும். எனவே, நம் இடத்தை கிரையப் பத்திர மூலம் பதிவு செய்து வாங்கி விட்டோம், எல்லாம் முடிந்துவிட்டது என இருக்கக் கூடாது. உடனே பட்டா பெயர் மாற்றம் செய்து வருவாய்த் துறையின் அனைத்து பதிவேடுகளையும் நமது பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும்.
பலரது கனவான சொத்துக்கள் வாங்குவது சம்பந்தமான பல உபயோகமான தகவல்களை மிக விளக்கமாகக் கூறினீர்கள். மிக்க நன்றி!
பீட்டர் அவர்களின் ஆலோசனை பெற விரும்புவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: 0091 44 2431 2431
Tamil Nadu Blood Bank Directory
LIST OF BLOOD BANKS QUASI/CENTRAL/VOLUNTARY/PRIVATE
|
1. |
Christian Fellowship Community Health Centre, Shanthipuram, Ambilikkai. | |
|
2. |
A.A.Lab Services, |
28170930 |
|
3. |
| |
|
4. |
Apollo Hospital Enterprises, Thousand light, Chennai - 600 006. | |
|
5. |
Bulls Eye Blood Bank, Purasawalkam, Chennai - 600 034. | |
|
6. |
| |
|
7. |
CSI Rainy Hospital, No.45-A, | |
|
8. |
Devaki Hospital Limited, Chennai - 600 004. |
4992607 |
|
9. |
ESI Corporation, K.K.Nagar, Chennai. | |
|
10. |
Heavy Vehicle Factory, Avadi, Chennai. | |
|
11. |
| |
|
12. |
Indian Red Cross Society. | |
|
13. |
Janseva Blood Bank & Research Centre, Chennai 600 024. | |
|
14. |
Jeevan Blood Bank & Research Centre, Chennai - 600 034. | |
|
15. |
| |
|
16. |
Lions Blood Bank, Chennai. | |
|
17. |
| |
|
18. |
| |
|
19. |
| |
|
20. |
| |
|
21. |
Nagamani Blood Bank, | |
|
22. |
| |
|
23. |
Rotary Club of | |
|
24. |
Sanjeevini Blood Bank, Kilpauk, Chennai - 600 010. | |
|
25. |
| |
|
26. |
Sree Venkateswara Blood Bank, Royapuram, Chennai 600 013. | |
|
27. |
Southern | |
|
28. |
Tamil Nadu Hospital Limited, Perambakkam, Chennai 600 302. | |
|
29. |
The | |
|
30. |
The | |
|
31. |
VHS Adyar, Chennai. | |
|
32. |
| |
|
33. |
| |
|
34. |
| |
|
35. |
| |
|
36. |
K.G.Hospital, Coimbatore-18. |
212121 to 212129, 218001 to 218009. |
|
37. |
|
827784 |
|
38. |
| |
|
39. |
|
570170 |
|
40. |
Ravijay Blood Bank, |
235126, 230153, |
|
41. |
Sheela Hospital Private Limited, | |
|
42. |
|
1210075, 76 & 77 |
|
43. |
Blood Donor's Association, | |
|
44. |
Senthil Blood Bank, Manjakuppam, Cuddalore-2. | |
|
45. |
Ashok Blood Bank and Clinical Lab, Dharmapuri. | |
|
46. |
J.P. Blood Bank, Dindigul-1. | |
|
47. |
Raja Rajeswari Nursing Home, Dindigul. |
422441 to 422444 |
|
48. |
|
30399 |
|
49. |
Erode Blood Bank & Clinical Lab. Erode-1. | |
|
50. |
| |
|
51. |
Subha Blood Bank, Erode- 9. | |
|
52. |
Karur Blood Bank, Karur. | |
|
53. |
Sri Kaali Blood Bank, Kumbakonam. | |
|
54. |
Abirami Blood Bank, Madurai-1. | |
|
55. |
|
626458 |
|
56. |
| |
|
57. |
Sai Blood Bank & Clinical Lab, | |
|
58. |
Sathyam Blood Bank, Madurai-9. |
|
|
59. |
Southern Railway Divisional Hospital, | |
|
60. |
Thai Moogambigai Blood Bank & Clinical Laboratory, Madurai-20 | |
|
61. |
The | |
|
62. |
Vignesh Blood Bank, Madurai-20. | |
|
63. |
The |
275516 |
|
64. |
A.V.Rajan Blood Transfusion Services, Nagercoil. | |
|
65. |
| |
|
66. |
Kanya Blood Bank, Nagercoil -1. | |
|
67. |
Vivek Blood Bank Trust, Nagercoil -3. | |
|
68. |
Bharat Clinical Laboratory & Blood Bank, Namakkal. | |
|
69. |
| |
|
70. |
| |
|
71. |
| |
|
72. |
| |
|
73. |
| |
|
74. |
Pollachi Blood Bank Services, Pollachi. | |
|
75. |
Pioneer Blood Bank, No.68, | |
|
76. |
Maruthi Blood Bank, Bangalore Bye pass Road, | |
|
77. |
Minu Labs & Blood Bank, Salem-7. | |
|
78. |
Queen's Mary's Clinical Laboratory & Blood Bank, | |
|
79. |
| |
|
80. |
Sithi Vinayagar Blood Bank, | |
|
81. |
Sri Gokulam Hospital Private Limited, | |
|
82. |
Vikram Clinical Blood Bank, Theni | |
|
83. |
Ambigai Blood Bank, Thanjavur. | |
|
84. |
Navin Blood Bank, Thanjavur. | |
|
85. |
Sri Kali Blood Bank, Thanjavur -7. | |
|
86. |
| |
|
87. |
Vignesh Blood Bank, Tirupathur. | |
|
88. |
BHEL ( | |
|
89. |
Blood Bank of Bharat, Trichy -18. | |
|
90. |
Blood Bank of Shavana, Trichy -18. | |
|
91. |
| |
|
92. |
Church of | |
|
93. |
Friends Blood Bank, Contonment, Trichy. | |
|
94. |
Sea Horse Hospital Limited, No.6, | |
|
95. |
Southern | |
|
96. |
Bethel Blood Bank, Tirunelveli. | |
|
97. |
Easwaran Clinical Laboratory Blood Bank, Tiruppur. | |
|
98. |
Moses Blood Bank, Tuticorin-2. | |
|
99. |
Tuticorin Blood Bank, Tuticorin-2. | |
|
100. |
Virudhunagar Hindu Nadar's V.Dhanaswamy Pariamaladevi Medical Trust, Virudhnagar. |
45607, 44282 |
|
101. |
| |
BSNL Toll Free Numbers
Dial the following numbers in case of Assistance/ Help without paying for it (from BSNL telephones) : Some of the services are available in select cities only. Please check the
availability in your city. Services written in blue color are available on STD also.
*-*-*-*-*-*-*
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

